"சிரிப்பின் மிச்சம்" எனும் இந்த சிறுகதைத் தொகுப்பில் முகநூலில் வெளியாகி பலர் படித்துப் பாராட்டிய சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பல தளங்களைத் தொட்ட சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
"சிரிப்பின் மிச்சம்" சிறுகதை பலரும் தங்கள் அனுபவத்தைப் பொருத்திப் பார்க்கக் கூடிய எளிய நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்டது. எறும்புகளின் வாழ்வியலை ஒற்றி எழுதப்பட்ட "உணவுச் சுழற்சி" சிறுகதை, இஸ்ரேல் பாலஸ்தீன சூழலைச் சுற்றிப் பின்னப்பட்ட "சமய விதி", நம்மை சுற்றி நிகழும் இறப்புகள் நம்மேல் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய "இறந்த காலங்கள்", சுழற்சிக் கதை எனப் பல வகைகளாலான சிறுகதைகள் இதில் இடம் பெற்றுள்ளன.