‘உங்கள் உள்ளத்தைப் புனிதப்படுத்த விரும்புவீர்களானால் அன்னை ஸ்ரீசாரதா தேவியின் புனிதப் பெருவாழ்வையும் அவரது மகிமையையும் சிந்தியுங்கள். அதைவிடச் சிறந்த சாதனம் வேறொன்றில்லை’ என்று எழுதினார் தலைசிறந்த சிந்தனையாளரான Dr.டி.எம்.பி. மகாதேவன்.
அன்னை தமது பிள்ளைகளுடன் நிகழ்த்திய உரையாடல்கள் இந்த நூலில் இடம்பெறுகின்றன. அசாதாரணமான குடும்பச் சூழ்நிலை, அளவற்ற பொறுப்புகள், அத்தனையையும் மீறிய ஆன்மீக மகோன்னதங்கள்— அன்னையின் வாழ்க்கையில் மட்டுமே நாம் காணக்கூடிய இந்த அற்புதத்தைப் பல்வேறு பரிமாணங்களுடன் இந்த நூல் வழங்குகிறது.